தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 வது குருபூஜை விழா மிகவும் சீறும் சிறப்புமாக ஊர் பொது மக்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் உக்கிரபாண்டித் தேவர் மற்றும் ராணி அம்மையாரின் புதல்வனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பிறந்தார்.
தேவர் திருமகனார் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு
பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல்,
முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.
இன்றைய காலை பொழுதில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி கிராமத்தில் பொது மக்கள் முன்னிலையில் தேவரின் புலி கொடி ஏற்றி பொங்கல் வைத்து வழிபட்டு அன்னதானம் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.