கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா பகுதியான மூணார் பகுதியில் மிகவும் முக்கியமான ஒன்று மௌண்ட் கார்மல் மாதா தேவாலயம் இங்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேவாலயத்தின் பாதிரியார் கொடியேற்றி துவங்கி வைத்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து பாதர் மைக்கேல் அவர்கள் திருப்பலியை நடத்தினார். இதில் மூணார் மற்றும் மூணார் பகுதியை சுற்றியுள்ள அநேக ஜனங்கள் கலந்து கொண்டனர். வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடைபெறும் இந்த மாதாவின் சிலை பயணமானது ஆரம்பமானது .
இந்த திருவிழாவானது அக்டோபர் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று கருதப்படுகிறது அதுவரையில் தினமும் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளும் சிறப்பு கூட்டங்களும் தொடர்ந்து நடைபெறும் நிறைவு கூட்டத்தில் பாதிரியார் ஜஸ்டின் அவர்கள் கலந்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.