தமிழகத்தில் ஊர்க்காவல் படையில் (ஹோம் காட்) காலியாக உள்ள 817 பணியிடங்கள் நிரப்ப தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.இதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 45 ஆண்கள் 11 பெண்கள் என மொத்தம் ஊர்காவல்படையில் 56 காலிப் பணியிடங்கள் உள்ளன. Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை சிப்காட் ரோடு (ஐ வி பி எம் )எதிரில் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் இடம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி சேவை மனப்பான்மையும் இருக்க வேண்டும் மாத ஊதியம் கிடையாது பணி நாட்களுக்கான தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் 45 நாட்கள் நிர்நயிக்ககப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும். என்று ராணிபேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்தி களுக்காக
-P. இரமேஷ் வேலூர்.