விளாத்திகுளம் அருகே மழையால் நிரம்பிய ஓடை.. முட்டு அளவு தண்ணீரில் மயானத்திற்கு முதியவர் உடலை எடுத்துச் சென்ற அவலம் பொதுமக்கள் பாலம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாவிலோடை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் மயானத்திற்கு அங்கு உள்ள ஓடையை கடந்து தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுவும் மழைக்காலங்கள் வந்துவிட்டால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் அவல நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. எனவே அந்த நீர் வரத்து ஓடையை கடக்க காலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த கொப்பரக் கவுண்டர் (100) என்ற முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடியிலும் கன மழை பெய்து அந்தப் பகுதி ஓடையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதனால் அந்த முதியவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் மிகுந்த சிரமத்துடன் பொதுமக்கள் இறுதி சடங்கு செய்து எடுத்துச் சென்றனர்.
இந்த முதியவரின் மரணத்தில் நேர்ந்த அவலம் இனிவரும் காலங்களில் தங்கள் கிராமத்தில் எந்தவித மக்களின் மரணத்திற்கும் நேர்ந்து விடக்கூடாது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதற்காக இனியாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.