கோவை ரத்தினபுரி தில்லை நகரில் வசிப்பவர் வசந்தா (வயது60). நெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சிவகங்கை.
வசந்தா தன் சொந்த ஊரான சிவகங்கையில் சில வருடங்களுக்கு முன்பு இருளாயி (57) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினார். அதை வட்டி, அசலுடன் சேர்த்து செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் இருளாயி தனது மகளுடன் கோவைக்கு வந்து வசந்தாவிடம் கடனை திரும்ப கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருளாயி, அவரது மகள் முத்துலட்சுமி ஆகியோர் சேர்ந்து வசந்தாவை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வசந்தா ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இப் புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் இருளாய் மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அருண்குமார் கிணத்துக்கடவு.