கோவில்பட்டியில் பேவர்பிளாக் சாலைப் பணிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி அவர்கள் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாநகராட்சி இனையாக கோவில்பட்டி நகராட்சி வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மாநகராட்சிக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜி அவர்கள் செய்து வருகிறார்கள்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பாலாஜி நகர் 2-வது தெருவில் பஞ்சாயத்து யூனியன் பொது நிதியில் ரூ. 5½ லட்சம் செலவில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல். ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தொடர்ந்து கோவில்பட்டி ஜோதி நகர் ஓ. எஸ். வேலுச்சாமி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 14 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டு புதிய சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அ. தி. மு. க. நகரச் செயலாளர் விஜயபாண்டியன், பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp