கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தங்கம் தியேட்டர் அருகே ஓம் பிரகாஷ் தியேட்டர் எதிரே பெரியார் காலனி,CTC காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்கனவே தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது இந்த டாஸ்மார்க் கடையால் இப்பகுதி பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் இந்நிலையில் இதே பகுதியில் தனியார் மதுபான கடை திறக்கப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தனியார் மதுபான கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவரம் அறிந்து ASP பிருந்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி தனியார் மதுபான கடையை மூடினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பகுதியில் அரசு மதுபான கடை உள்ள நிலையில் அதே பகுதியில் மீண்டும் இன்னொரு கடை இருந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறிதான் இதைக் கருத்தில் கொண்டு தனியார் மதுபான கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.