பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி தர வேண்டி மூதாட்டி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு!

த்தியில் பாஜக அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஆட்சியமைத்த பின், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இனிமேல் ரூபாய் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும் ரூ500, ரூ1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள், டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டன.

இதனால் ஒவ்வொரு இந்தியரும் சொல்லொண்ணா துயரை அனுபவத்தனர். ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படாமல் ஆகின. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்காக, மக்கள் பல மணிநேரம் பல கிலோ மீட்டர் தூரம் வரிசைகளில் நின்ற அவலமும் நிகழ்ந்தது. பொதுமக்களில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. இதனால் ஏழைய எளிய நடுத்தர மக்கள், சொந்த வேலைகளை விட்டுவிட்டு பணம் எடுக்கவும், கையிருப்பு பணத்தை மாற்றவும் படாதபாடுபட்டனர். வங்கிகளிலேயே, வரிசைகளிலேயே உயிரிழந்து போனவர்களும் உண்டு.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் சுமார் ஓராண்டு காலம் ஏடிஎம்களில் குறிப்பிட்ட அளவுக்குதான் பணம் எடுக்க முடிந்தது. அன்று தொடங்கிய ஏடிஎம் கட்டுப்பாடுகள் இன்று வரை பல்வேறு வகைகளில் தொடரவே செய்கின்றன. இப்படி மக்களை துயரப்படுத்தி கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததா?
மீட்கப்பட்ட கறுப்பு பணம் எவ்வளவு? போன்ற கேள்விகளுக்கு இன்று வரையிலும் பதில் இல்லை.
பழைய ரூபாய் நோட்டுகளை ஒழித்துகட்டி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. நாட்டின் வரி விதிப்புகள் ஜிஎஸ்டி எனும் புதிய முறைக்கு தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்குள் திணிக்கப்பட்டது. ஆனால் இது எதுவும் சாமானியர்களின் வாழ்விலும் இந்திய பொருளாதாரத்திலும் எந்தவிதமான மறுமலர்ச்சியையும், முன்னேற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. இத்தகைய துயர்மிகு காலங்களை கடந்ததை தெரியாத மூதாட்டி ஒருவர், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தர கலெக்டரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் 80 வயதான மாரியம்மாள். இவரது கணவர் சுந்தர்ராஜ். இவர்களது மகன் செந்தில்குமார். இருவரும் இறந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியம்மாள் தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து உள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்தது. அதனைப் பார்த்தபோது அதில் பழைய செல்லாத ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் என மொத்தம் ரூ.15 ஆயிரம் இருந்தது. இதையடுத்து மூதாட்டி, அந்த ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் வந்து, கலெக்டரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என மனு அளித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp