கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் என்.ஜி.எம் கல்லூரியில் உள்ள நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் (என்.எஸ்.எஸ்) இரண்டு நாட்களுக்கான தூய்மைப் பணி முகாமை தொடங்கினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
என்.ஜி.எம்.கல்லூரி முதல்வர் டாக்டர்.ஆர்.முத்துக்குமரன் வழிகாட்டுதல் படி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சோமசுந்தரம் முன்னிலையில் 50 மாணவ மாணவிகள்
கலந்துகொண்டனர்.
இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் .கார்த்திகேயன். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளிடையே தூய்மை விழிப்புணர்வு குறித்து பேசினர்.
இதில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கவிஞர்.முருகானந்தம். நகரமன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம். செவிலியர்கள் லாவண்யா. உமா உள்ளிட்டோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.