மெட்ரோ துாண்களில் பல வண்ணங்களில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள்!!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இருக்கும் மெட்ரோ துாண்களில் பல வண்ணங்களில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள், பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தமிழரின் கலாசாரம், பண்பாட்டை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சொந்தமான இடங்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மேம்பாலத்தின், துாண்களில் பச்சை, நீளம், சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. இது, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சிலர், துாண்கள் அருகே சென்று ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: “சுவர்கள், துாண்கள் காலியாக இருந்தால், சில அரசியல் கட்சியினர் மற்றும் இதர அமைப்பினர் போஸ்டர்களை ஒட்டி அசுத்தமாக்கி விடுகின்றனர்.

எனவே, இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் வகையில், தமிழரின் பண்பாடு கலாச்சாரம், தமிழ் மொழி எழுத்துக்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள, மெட்ரோ துாண்களில் வண்ண ஓவியங்களை வரைந்து உள்ளோம். ஓவியர்கள் மற்றும் சில அமைப்பினர் தாமாக முன்வந்து ஆர்வமாக ஓவியங்களை வரைகின்றனர்” இவ்வாறு அவர்கள் கூறினர்.

-கார்த்திக், தண்டையார்பேட்டை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp