ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகிலுள்ள கீழவலலை கிராமத்திற்கு பேருந்து தொடக்கம்!


கமுதி அருகே சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாத கிராமத்திற்கு, முதன்முதலாக பேருந்து வந்ததையடுத்து மாணவர்கள் பேருந்தை கட்டியணைத்து தேங்காய், பழம், மாலை அணிவித்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழவலசை கிராமம் உள்ளது. அங்கு 100க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், பேருந்துக்காக கீழவலசை கிராமத்திலிருந்து செங்கப்படைக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கும், அதேபோல் கீழவலசை கிராமத்திலிருந்து பேரையூர் கிராமத்திற்கு ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் கடந்து தினந்தோறும் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நடந்து சென்று வந்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் கடந்த பல ஆண்டுகளாக தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கிராமங்களின் கோரிக்கையை ஏற்று, சுதந்திரம் அடைந்த காலத்திற்கு பிறகு இன்று கீழவலசை கிராமத்திற்கு பேருந்து வந்தது. இதனையடுத்து நெகிழ்ச்சியடைந்த பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்தை கட்டியணைத்து வரவேற்பு அளித்ததோடு, அரசு பேருந்துக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் ஊதுபத்தி வைத்து வழிபட்டு, பின்னர் பெண்கள் குலவை விட்டு ஆரவாரத்துடன் பேருந்தை வழி அனுப்பி வைத்தனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp