லக்கேஜ் டிக்கெட் எடுக்காத பிரச்சனையில் சிக்கிய 80 லட்ச ரூபாய்!! காவல்துறை விசாரணை!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கோவை மத்திய பேருந்து நிலையத்திற்கு லக்கேஜ் உடன் வந்து பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் டிக்கெட் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனக்கு மட்டும் டிக்கெட் எடுத்துவிட்டு லக்கேஜிற்கு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உடனே லக்கேஜிற்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு குமார் டிக்கெட் எடுக்க மறுத்ததால் நடத்துநருக்கு கோபம் வந்துவிட்டது. இதையடுத்து காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. குமாரும், நடத்துநரும் வாக்குவாதத்தில் ஈடுபட விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. உடனே பேருந்தை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு விடுமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தார். இதனால் சக பயணிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஏன் இப்படி தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறீர்கள்? என பயணிகள் முணுமுணுக்க தொடங்கினர். இந்நிலையில் பேருந்து அருகிலுள்ள காட்டூர் காவல் நிலையத்திற்கு சென்றது. அங்கு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். குமார் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை தனியாக அழைத்து விசாரித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வைத்திருந்த லக்கேஜ் பற்றி விசாரிக்கப்பட்டது. அதை திறந்து பார்த்ததும் போலீசார் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் முழுவதும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
அதை எடுத்து எண்ணி பார்த்ததில் மொத்தம் 80 லட்ச ரூபாய் ரொக்கம் இருந்தது. ஏன் இவ்வளவு பணம்? எங்கிருந்து வந்தது? எங்கு கொண்டு செல்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பைனான்ஸ் செய்வதற்காக எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். அதை போலீசார் நம்பவில்லை. உரிய ஆவணங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. இதையடுத்து பணத்தை கைப்பற்றி அடுத்தகட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஒருவேளை ஹவாலா பணமாக இருக்குமோ? என்ற கோணத்தில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp