வேலூர் சிஎம்சி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு !


வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியின் மாணவர் விடுதி பாகாயம் பகுதியில் இருக்கிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவர்கள் பலரையும் உள்ளாடையுடன் விடுதி வளாகத்தை சுற்றிவர செய்த சீனியர் மாணவர்களின் ராகிங் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

அதில் சீனியர் மாணவர்கள் செய்யும் பல ஆபத்தான செயல்களும் பதிவாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்கள் தங்களின் பெயர்களை குறிக்கிடாமல் சிஎம்சி தடுப்பு கமிட்டிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அதில் சீனியர் மாணவர்களால் தங்களுக்கு மேலும் உடல் ரீதியான கொடுமைகளையும் அவர்கள் விவரித்தனர், இதை எடுத்து சீனியர் மாணவர்களிடம் ராகிங் தடுப்பு கமிட்டி குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் 7மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து சிஎம்சி கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ்குமார் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் அந்த கல்லூரி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டப்பிரிவில் போலீசார் வழக்கு செய்திருக்கிறார்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 2ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P.இரமேஷ் வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts