சிவகங்கை மாவட்டம் இடையான்குடியை சேர்ந்தவர் பிராங்கிலின் ஆரோன் (வயது 25). இன்ஜினியரிங் பட்டதாரி இவர். சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தார். பின்னர் அவர் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே தான் படித்ததற்கு ஏற்ற வேலைக்காக பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார். ஆனால் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மனவேதனையில் அவர் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து விடுதி ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிராங்கிலின் ஆரோனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து. இச்சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அருண்குமார் கிணத்துக்கடவு.