வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை!!

சிவகங்கை மாவட்டம் இடையான்குடியை சேர்ந்தவர் பிராங்கிலின் ஆரோன் (வயது 25). இன்ஜினியரிங் பட்டதாரி இவர். சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தார். பின்னர் அவர் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே தான் படித்ததற்கு ஏற்ற வேலைக்காக பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார். ஆனால் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மனவேதனையில் அவர் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில்  விரக்தியடைந்த அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவம் குறித்து விடுதி ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிராங்கிலின் ஆரோனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து. இச்சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp