கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது! காவல்துறை நடவடிக்கை!!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவருக்கு கோவை புதூர் அடுத்த சிபிஎம் கல்லூரி அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற் கொண்ட பொழுது, மதுக்கரையை சேர்ந்த 22 வயதான ரகு கிருஷ்ணன், மற்றும் 25 வயதான அஜித்குமார் என்கின்ற புள்ளி அஜித், 21 வயதான கிருஷ்ண பிரசாத், 17 வயது சிறுவன் ஒருவன், மற்றும் ஹரிஹரன் என்கின்ற ஹரி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, கஞ்சா விற்பனைக்கு வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
மேலும் படிக்கவும்:-👇