காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றலாம்!
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
கோவை கோபாலபுரம் பகுதியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தொழில்துறை வளர்ச்சியின் விளைவாக கோவை மாநகரத்தில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது, இதனை சமாளிக்கவும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், டிராபிக் வார்டன் அமைப்பு உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சமூக சிந்தனையை கொண்ட பொதுமக்கள், டிராபிக் வார்டன் அமைப்பில் சேர்ந்து காவல்துறையினருடன் சேர்த்து பணியாற்றலாம், எனவும், 25 வயதிற்கு மேல் உள்ளவர்கள், 45க்கு கிழ் உள்ளவர்கள், இதில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆர்வமுள்ளவர்கள் இந்த அமைப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது அதனை பூர்த்தி செய்து, 18, 12, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிஎஸ்ஐ கல்லூரி வளாகம், மற்றும், வ உ சி பூங்கா பகுதியில் காவல்துறையினரால் விண்ணப்பங்கள் பெறபட உள்ளது , பொதுமக்கள் இதில் பயன் பெறலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.