கோவில்பட்டி அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!!.

கார் விபத்தில்

கார் விபத்தில்

கோவில்பட்டி அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!!.

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் ஹ்ரித்திக் (22). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை தனது நண்பர்களுடன் காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இளையரசனேந்தல் கிராமத்தை அடுத்து பாலத்தில் வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்துடன் கார் மோதியது.

இந்த விபத்தில் ஹ்ரித்திக் மற்றும் அவரது நண்பர்களான வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), நாலாட்டின்புதூர் மேல தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23)ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் குமார் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரி கண்ணன் மற்றும் தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூவரின் உடல்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விபத்தில் காயம் அடைந்த 2பேரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நாடு அரசு அவ்வப்போது சாலை விழிப்புணர்வு வழங்கி வருகிறது. இருப்பினும் இது போன்ற நிகழ்வுகள் நடைப்பெற்றது வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

மேலும் படிக்கவும்:

டிப்பர் லாரியின் திடீர் பிரேக்கால் விபத்துக்குள்ளான தனியார் பள்ளி வாகனம்!👇

https://nalaiyavaralaru.com/2022/12/டிப்பர்-லாரியின்-திடீர்/ ‎

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp