கோவையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு! மீண்டும் மிரட்டும் புதுவகை வைரஸ்!!

கோவை

கோவை:

முதன்முதலாக சீனாவின், வூஹான் நகரில் கொரோனா நோய்த் தொற்று 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து, உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய்த் தொற்று பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்தியாவில் டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற புதிய வகை நோய்த் தொற்றுகளால் பாதிப்பு அதிகரித்தது. இதனால், தினசரி 4 லட்சம் போ் வரை புதியவகை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்தது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் ‘சாா்ஸ் கோவ் 2’ என்ற புதிய வகை கொரோனா நோய்த் தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், மேற்கண்ட நாடுகளில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் படுபவா்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் நாடு முழு வதும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:
கோவையில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் காணப்படுகிறது. வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத் தியுள்ளது

கொரோனா நோய்த் தொற்று அறி குறிகள் உள்ளவா்கள், அவா்களுடன் தொடா் புடையவா்கள், நோய்த் தொற்று பாதிக்கப் பட்டவா்களுடன் தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வட்டார அலுவலா்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. பருவ மழை காலம் என்பதால் கொரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எனவே, கொரோனா நோய்த் தொற்று அறிகுறி உள்ளவா்கள் தவறாமல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோத னைகளை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை விமான நிலை யத்தில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு 23 விமானங்கள் தினமும் இயக்கப் படுகின்றன. கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதை தொடர்ந்து கோவை விமானநிலையத்தில் முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp