கோவையில் துவங்க உள்ள நேஷனல் மாடல் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் துவக்கி வைக்க உள்ளார்!!

கோவை அவினாசி சாலையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளி வளாகத்தில் நேஷனல் மாடல் கிரிக்கெட் அகாடமி எனும் பயிற்சி மையம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி துவங்க உள்ளது. முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வழங்க உள்ள நேஷனல் மாடல் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர்கள் மோகன் சந்தர் மற்றும் உமா மோகன் ஆகியோர் அகாடமி குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது இந்த துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ள பவுன்சர் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து கோவையில் இந்த பயிற்சி மையத்தை துவங்க உள்ளதாகவும்,ஐ.பி.எல்.தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடிய வீரர் தியாகராஜன் இதில் முதன்மை பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும், உள்ளூரில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

முதல் கட்டமாக மூன்று வலை பயிற்சி மையங்கள் வாயிலாக சுமார் ஐம்பது பேர் வரை பயிற்சிகளை சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்..வரும் 3 ஆம் தேதி நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp