டிப்பர் லாரியின் திடீர் பிரேக்கால் விபத்துக்குள்ளான தனியார் பள்ளி வாகனம்!
பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த மங்களத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் கதிரவன் ஸ்கூல் அருகே விபத்துக்குள்ளானது.
பள்ளி வாகனத்தை ஒட்டி சென்ற டிரைவர் சுதாரித்து மெதுவாக பிரேக்கை அப்ளை செய்ததால் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி உயிர்த்தபினர். பள்ளி வாகனத்திற்கு முன்பு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென சடன் பிரேக் அடித்ததால் இந்த விபரீதம் நடந்து விட்டது. .
பள்ளி வாகனம் விபத்துக்கு உள்ளானதை அறிந்தும் டிப்பர் லாரியின் டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து நிற்காமல் சென்ற டிப்பர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதா என்றும் அதன் மூலம் டிரைவரை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பள்ளி குழந்தைகள் சரியான நேரத்துக்கு பள்ளி செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.
One Response