நிர்மலா மாதா பள்ளியில் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்!!!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மல மாதா பதின்ம மேல்நிலைப்பள்ளி குனியமுத்தூர், டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது இன்று பள்ளியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அருட் சகோதரி விமலா, பள்ளி முதல்வர் அருட் சகோதரி ரோஸ்லின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியானது மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டும் விதமாகவும் அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் அமைந்தது. மாணவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து மற்றும் பல மாணவிகள் பாடல்களை பாடியும் நாடகங்களை நிகழ்த்தியும் அசத்தினர். இதனை சிறப்பாக நடத்தியதற்காக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.