நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோவை காவல் ஆயுதப்படை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்…!
கோவை: பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கோவை மாநகர ஆயுதப்படை ஆகியோர் இணைந்து, காவல்துறை மக்களின் காவலன்,மரங்கள் இயற்கையின் காவலன் என்ற தலைப்பில்,பயிற்சி பெறும் ஆயுதப்படை காவலர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி சார்பாக மகிழ்வித்து மகிழ் என, பல்வேறு சேவை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை மாநகர காவல் துறை ஆயுதப்படையுடன் இணைந்து பயிற்சி பெறும் ஆயுதப்படை கவலர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடு விழா ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற்றது.இதில் கோவை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர்,தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,பன்னாட்டு லயன் சங்கம் 324 சி மாவட்ட அமைச்சரவை செயலாளர் மோகன் ராஜ் , மக்கள் தொடர்பு அலுவலரும், வட்டார தலைவருமான லயன்ஸ் செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்..நிகழ்ச்சியில் மரங்களின் பயன்கள் குறித்தும், மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து உதவி ஆணையர் சேகர் பேசினார். தொடர்ந்து, ஆயுதப்படை மைதான வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகளை பயிற்சி பெறும் ஆயுதப்படை காவலர்கள் நட்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் டாக்டர் அகர்வால் மருத்துவமனையினரின் கண் மருத்துவ பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.இதில் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில்,. மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், உலக சேவை திட்ட மாவட்ட தலைவர் பாலமுருகன், மண்டலத் தலைவர் மணிவண்ணன்,GAT ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியம்,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாவட்ட தலைவர் காளியப்பன், நேரு நகர் செயலாளர் மோகன்ராஜ்,வெங்கடேஷ், தீபக் குமார், கிரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-சீனி போத்தனூர்.