தென் தமிழகத்தில் முக்கிய தொழிலாக கருதப்படும் பனை தொழில் போதிய ஊக்கம் இல்லாமல் நலிந்து வந்தது. தற்போது அதனை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான வாரியம் மூலம் மேம்படுத்தும் திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பனையேறும் தொழிலாளை பாதுகாக்கும் பொருட்டு நவீன ரக எந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனடைப்படையில் பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி இலகுவாக ஏறுவதற்காகவும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும், கருவிகளைக் கண்டுபிடிப்பதற்காக பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பதற்காகும் மொத்த செலவு, விலையின் உண்மைத் தன்மை, இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், விருது மேற்கண்ட குழுவால் முடிவு செய்யப்படும். பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள், இக்குழுவின் முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்க வேண்டும்.
கண்டுபிடிப்பாளர்கள் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்” என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.