புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலக்கல்வி..!!…
கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டிசம்பர் 14ஆம் தேதி புதன்கிழமை கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கு புகையிலை மற்றும் புகையிலைபொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றிய நலக்கல்வி அளிக்கப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தில் கட்டிகளை உருவாக்குகின்றன. அவை இதய தமனிகளில் சிக்கி மாரடைப்பை ஏற்படுத்தும். அதோடு புகையிலை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்பன போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் மருத்துவர்.சரண்யா கலந்துகொண்டு சிறபப்புறை ஆற்றினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர். ராஜசேகர் சுகாதார ஆய்வாளர்கள் கிஷோர், திவான்ஸ்வர்மா, நந்தா மற்றும் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.