கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் என்னும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கணேசபுரம் என்னும் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பி வருகிறது இந்த தடுப்பு சுவரானது மக்கள் பயன்படுத்தும் பாதையை வழிமறித்து அமைப்பதாக அந்த பகுதி மக்கள் மிகுந்த மன வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கணேசபுரம் சீனிவாசன் நகர் முல்லை நகர் என்னும் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த சாலையை நீண்ட வருடங்கள் பயன்படுத்தி வருவதோடு அந்த பகுதி மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, மற்றும் அவர்களது சொந்த வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்தப் பாதை அடைபட்டால் மக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் மேலும் இந்த பாதையை பொதுமக்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை சுமார் 200க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியில் கூடி தங்களுக்கு இந்த பாதையை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதோடு மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த சாலையை மரித்து சுற்றுச்சூழல் எழுப்பக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் சுற்றுச்சுவர் எழுப்பினால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் ஒன்று கூடி மிகப்பெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவிக்கின்றனர். அந்தப் பகுதியில் திடீரென மக்கள் கூடியதால் காவல்துறை உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து மக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர் ஈசா,
-ராஜேந்திரன்.