வேலூர் வி.ஐ.டி.யில் உழவர் களஞ்சியம்
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 6ஆம் ஆண்டு உழவர் களஞ்சியம் நிகழ்ச்சி நாளை ஆரம்பம் ஆகிறது வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாக்கத்தில் நடைபெறும் இந்த வேளாண் கண்காட்சியானது டிசம்பர் 14 ,15 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் வேளாண்மை துறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். அத்துடன் வேளாண்மை சார்ந்த செயல் விளக்கங்களும் வேளாண் பொருட்கள் கண்காட்சியும், நடைபெறுகிறது. இயற்கை விவசாய கொள்கை எப்படிப்பட்ட அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்? இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ICAR, நபார்டு தமிழ்நாடு அரசு வேளாண்மை& உழவர் நலத்துறை மற்றும் பசுமை விகடன் ஆகியவை ஒத்துழைப்பு வழங்கி உள்ளன.
98 அரங்குகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 வேளாண் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சியில் தேன், ஆயுர்வேதம்,விதைகள் எண்ணெய் முதற்கொண்டு தென்னை நார் உட்பட நீர்ப்பாசனம், மூங்கில் கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள் வரை அனைத்து வேளாண் சார்ந்த பொருட்கள் இந்த கண்காட்சி அரங்கில் இடம்பெறுகின்றன.
அத்துடன் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை கால்நடை வளர்ப்பு துறை, விவசாயப் பொறியியல் துறை,விதை சான்றிதழ் துறை,சந்தைப்படுத்துதல் துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் வனத்துறை அரங்குகளும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகிறது. விவசாய வங்கிக் கடன் பற்றிய விளக்க ஒரு சில வங்கிகள் கலந்துகொண்டு அரங்குகள் அமைகின்றன. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக அரங்குகளோடு பெங்களூரில் உள்ள ICAR, தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ICAR-மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்குகளும் இந்த கண்காட்சியில இடம் பெற்று சிறப்பிக்கப்படுகிறது.
இந்த கண்காசியுடன் கூட கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு வேலைவாய்ப்பு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு இரண்டு நாட்களுக்கு தனித்தனி அமர்வாக பேசவிருக்கின்றனர் முதல் நாளான 14ஆம் தேதி “இயற்கை விவசாயத்திற்கான இன்றைய தேவை”என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த பாமயன், விவசாயத்திற்கான அரசின் திட்டங்கள் மற்றும் ஆதரவு குறித்து திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சி கற்பகம் ஆகியோர் பேச உள்ளனர்.
இரண்டாம் நாளான 15- ம் தேதி மட்டும் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கம் மற்றும் சென்னா ரெட்டி அரங்கம் என இரண்டு அரங்கங்களில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.அண்ணா அரங்கில் நடைபெறும் கருத்தரங்கில் “நீர் மேலாண்மை”குறித்து விளக்குகிறார் பிரிட்டோராஜ் அவரை தொடர்ந்து இரண்டாம் அமர்வில் மத்திய வணிக வேளாண்மை துறை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் முதன்மை விஞ்ஞானி முனைவர் பொன் மணிவேல் மருத்துவ தாவரங்கள் குறித்து விவரிக்கிறார்.
லாண்டனில் பிரபலமாகும் சுரங்க வயல்கள்…நிலத்துக்கு கீழே நடக்கும் விவசாயம்! மூன்றாம் அமர்வில் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோமு சுந்தரலிங்கம் “மீன் வளர்ப்பு தொழில்நுட்பம்”பற்றி பேச உள்ளார்.அன்றைய தினம் கருத்தரங்கில் முதல்வர் அமர்வில் “சிறுதானியங்கள் மதிப்பு கூட்டல்”பற்றி திருவண்ணாமலை உள்ள சிறுதானிய மகத்துவ மையத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நிர்மலா குமாரி பேசுகிறார்.
அடுத்ததாக தோட்டக்கலை துறையின் முன்னாள் முதல்வர் டிஎன் பாலமோகன் “அடர்வு நடவு மற்றும் பருவம்கடந்த மா உற்பத்தி” குறித்து கருத்துரை வழங்க உள்ளார். மேலும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் முருங்கைப் பொருட்களின் மதிப்பு கூட்டல் பற்றியும் மீன் உணவு பொருட்கள் மதிப்பு கூட்டல் பற்றியும் வேளாண்மை துறை அலுவலர்கள் செயல் விளக்கம் அளிக்கின்றனர்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் மேலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் ஒன்றியத்திலிருந்து வி.ஐ.டி.பல்கலைக்கழகம் வரை வந்து செல்வதற்கான இலவச பேருந்து வசதி மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P. இரமேஷ் வேலூர்.