ஆனைமலை காவல் நிலையத்தில் பொது மக்களுக்கு கஞ்சா போதை பொருள் விழிப்புணர்வு..!!!
ஆனைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா போதை பொருள்களை ஒழிப்பதற்காக ஆனைமலை காவல் நிலையம் சார்பாக ஆனைமலை காவல் நிலையத்தில்
பொது மக்களுக்கு கஞ்சா போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் பி.கே அண்ணாதுரை,ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் கௌதம், செல்வராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகவேல் மற்றும் ஆனைமலை காவல் நிலைய போலீசார் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் P.K.அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் கஞ்சா போதை பொருளை உற்பத்தி செய்பவர் விற்பனை செய்பவர் கஞ்சா போதை பொருளை பயன்படுத்துபவர்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். அதனை அடுத்து ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது கஞ்சா போதை பொருளை பயன்படுத்தினால் சிறு மூளை பாதிப்பு ஏற்படும், மேலும் இந்த கஞ்சா போதை பொருள் உடல் ரீதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவே அதில் இருந்து மீள முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவே இப்பகுதியில் கஞ்சா போதை பொருளை ஒழிக்க வேண்டும் அதற்கு பொதுமக்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கஞ்சா போதை பொருள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது இந்த எண்களில் அழைத்து நீங்கள் தகவல் அளித்தால் ரகசியம் காக்கப்படும் என்று கூறினார். அதனை அடுத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ் அவர்கள் பேசியதாவது கஞ்சா போதை பொருள் விற்பனை செய்பவர், கஞ்சா போதை பொருள்கொண்டு வந்து கொடுப்பவர், கஞ்சா போதை பொருள் பயன்படுத்துபவர் இந்த மூன்று நபர்களையும் அடையாளம் காண வேண்டும் இதற்கு பொது மக்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தகவல் கொடுக்க வேண்டும், மேலும் கஞ்சா போதை பொருள் வழக்குகளில் கைதாக கூடியவர்களுடைய நபர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.