கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் மற்றும் ஒடையகுலப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜனவரி 3ஆம் தேதி இன்று ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் மேலும் அந்த மனுவில் கூறியுள்ளதாவது கடந்த 10 ஆண்டுகளாக விவசாய கூலிவேலை செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு சொந்தமாக வீடோ நிலமோ இல்லை. உறவினர் வீடுகளிலும், வாடகை
வீட்டிலும் கடும் நெருக்கடிகளுக்கிடையில் குடியிருந்து வருகிறோம். வருவாயின் ஒரு பகுதி விட்டு வாடகை தருவதற்கே செலவாகிவிடுவதால் குடும்பம் நடத்திட பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.
எனவே வீட்டுமனை ஒதுக்கி பட்டா தரக்கோரி மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும், பொள்ளாச்சி
ஆனைமலையில் நடந்த ஜமாபந்தி, சிறப்பு குறைதீர் முகாம் விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே இந்த முறையாவது எங்களுக்கு பட்டா வழங்கி வீட்டுமனை ஒதுக்கிடுமறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.