‘ஒரு நாள்’ என்ற தலைப்பில் சிக்கல்களின் புதிய தீர்வுகள் குறித்து போட்டிகள் நடைபெற்றது.
கோவை: ‘ஒரு நாள்’ என்ற தலைப்பில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் மாநகராட்சியால் கண்டறியப்பட்ட சிக்கல்களின் புதிய தீர்வுகள் குறித்து போட்டிகள்,வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் யங் இண்டியன்ஸ் இணைந்து, கோவை விழாவின் ஒருபகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான ‘ஒரு நாள் எனும் தலைப்பில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர்’ என்ற தனித்துவமான போட்டி நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் போட்டியில் பதிவு செய்து பங்கேற்ற மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மின் ஆளுமை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு, விபத்தில்லா சாலைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் தொடர்பான மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் மாநகராட்சியால் கண்டறியப்பட்ட சிக்கல் அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ள சிக்கல் அறிக்கைகளுக்கு அவர்களின் புதுமையான தீர்வுகளை வழங்கினர்.
இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,காவல்துறை ஆனையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடி வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
மேலும் வெற்றி பெறுபவர்கள் அனைவருக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 100சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி போத்தனூர்.