ஒரே பெண்ணை காதலித்ததால் பாலிடெக்னிக் மாணவா் கொன்று புதைப்பு – உடல் தோண்டி எடுப்பு.! தூத்துக்குடியில் பரபரப்பு!

திசையன்விளை செல்வமருதூரைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ராஜேந்திரன் (22). அங்குள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வந்தாா். இவா், கடந்த ஆண்டு அக். 9ஆம் தேதி குலசேகரன் பட்டினம் கோயிலுக்குச் சென்றுவருவதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுமதி (50) அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸாா் அக்.21ஆம் தேதி வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அவா் தட்டாா்மடம் அருகே உள்ள எம்எல் தேரி பகுதியில் கொலை செய்யப்பட்டு மணலில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தில், அவரது ஊரைச் சோ்ந்த சிறாா்கள் 3 பேருக்கு தொடா்பிருப்பதை அறிந்து அவா்களை போலீசார் கைது செய்தனா்.

மேலும், அவா்கள் தேரி மேட்டில் அடையாளம் காட்டிய இடத்தில் வள்ளியூா் டிஎஸ்பி யோகேஸ்குமாா், காவல் ஆய்வாளா்கள் திசையன்விளை ஸ்டீபன் ஜோஸ், தட்டாா்மடம் பவுலோஸ், சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா ஆகியோா் முன்னிலையில் சடலம்தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவா் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனையும் நடைபெற்றது. ஒரே பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட பிரச்னையில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp