கூட்டம்புளி PS ராஜா நகர் அருகே மேலும் ஒரு விபத்து!!

கூட்டம்புளி

கூட்டம்புளி

 

கூட்டம்புளி PS ராஜா நகர் அருகே மேலும் ஒரு விபத்து!!

பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி‍ : மனைவி கண்முன்னே பரிதாபம்!

தூத்துக்குடி அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன் கரிசல் கிராமம் கே. பாண்டியா புரத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஷங்கர் (39), இவர் நேற்று தனது மனைவி முத்துலட்சுமியுடன் தூத்துக்குடிக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். கூட்டம்புளியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி PS ராஜா நகர் வரும் போது எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோ பைக் மீது மோதியதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொ) அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சங்கர் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த புதுக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கோபால் மகன் கற்குவேல் அய்யனார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்

-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp