கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு சீல்!!

கெட்டுப்போன உணவு

கெட்டுப்போன உணவு

கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு சீல்!!

கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு ‘சீல்’ வைத்து தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்த சிக்கன் உள்ளிட்டவற்றை நாய் ஒன்று அசுத்தப்படுத்தியதாக உணவுப்பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் அந்த உணவகத்தை நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அந்த உணவகத்தில் இருந்த சுமார் 7 கிலோ பழைய சிக்கன் உள்பட கெட்டுப்போன சுமார் 15 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் உணவகத்தில் இருந்த பொது சுகாதார குறைபாடு, கால்நடைகள் உள்ளே வரும் வகையில் சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருட்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்தனர். மேலும் அந்த உணவகத்தை மூடி சீல் வைத்தனர். அதிகாரி எச்சரிக்கை உணவகங்கள் சுகாதாரத்தைப் பேணி பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நுகர்வோர்கள் உணவகங்களில் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் எவற்றையேனும் கண்டறிந்தால் மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

– வேல்முருகன் தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp