கேப் ரோட்டில் பாறைகள் உடைத்து கடத்தல் 6.5 கோடி ரூபாய் அபராதம்???
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தனுஷ்கோடி முதல் கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மூணார் அருகே உள்ள கேப் ரோடு என்ற குறுகலான வழி சாலை விரிவு படுத்துவதற்காக கGreen worth infrastructure என்ற தனியார் நிறுவனத்திடம் பாறைகளை உடைத்து எடுத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. தேவிகளும் பஞ்சாயத்து சார்பாக இதனை சர்வே செய்து அதிகமான பாறைகள் வெட்டி எடுத்துள்ளதாக ப இடுக்கி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேவிகுளம் துணை ஆட்சியர் உடனடியாக மீண்டுமாக நில அளவை செய்து உறுதி செய்தனர். 6.8 உடன் பாறைகள் உடைக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதனுடைய மதிப்பு சுமார் மூன்று கோடியே 70 லட்சத்திற்கும் மேலாக உள்ளது என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதிகமான பாறைகளை உடைத்து அரசுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்ட அளவை தாண்டி உடைத்து கடத்தி விற்பனை செய்த நிறுவனத்திற்கு உடும்பன்சோலை தாசில்தார் உடனடியாக இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் சுமார் 6.5 கோடி ரூபாய் வருவாய் துறைக்கு அடக்க வேண்டும் என அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். தேவிகுளம் மெஜிஸ்ட்ரேட் மூலமாக மேற்கண்ட விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.