கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அரசு பங்களாவை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்த பதிவு அலுவலர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில், சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
ADD
அரசு, வக்பு வாரியம், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலைகளை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது. அரசின் சட்டத் திருத்தத்துக்கு, சார் – பதிவாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மாதம் ஒரு சொத்து விற்பனை பத்திரம் பதிவானது. அதன் மதிப்பில் சந்தேகம் வந்ததால், துணை கலெக்டர் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. துணை கலெக்டர் ஆய்வுக்கு சென்றபோது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொத்து, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சப் – கலெக்டர் பங்களா என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, துணை கலெக்டர், பதிவுத்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். பத்திரத்தை பதிவு செய்த பொறுப்பு சார் – பதிவாளர் கதிரவனை, தற்காலிக பணி நீக்கம் செய்து, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-ஈசா.