சூலூர் பகுதியில் 6.500கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்! விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது!!
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதை பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர் கண்ணம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் சிங் என்பவரது மகனான மனோஜ் குமார் சிங்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 1/2 கிலோ எடையுள்ள 32 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாகவோ போதைப் பொருள்களை பயன்படுத்தி அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். போதையின் பாதையில் சென்றால் தனது வாழ்க்கையின் பாதையே மாறி விடுகிறது” என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அஞ்ச வேண்டாம் என்றும், தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.