தஞ்சை அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி… பயனடைந்த 150 கர்ப்பிணிகள்…!!
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்பு மற்றும் மகளிர் திட்டம் சார்பில் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச் செல்வன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பரணிகா வரவேற்று பேசினார். ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி பேசும்போது கர்ப்பிணி தாய்மார்கள் ஆயிரம் நாட்கள் ஒவ்வொரு நாளும் குழந்தையினுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பெற்றெடுக்கக் கூடிய குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான பலமான குழந்தைகளாக அறிவுள்ள குழந்தைகளாக உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களுடைய ஊருக்கும் நம்முடைய தமிழ்நாட்டுக்கும் நம்முடைய நாட்டிற்கும் நல்ல பயன் தரக்கூடிய குழந்தை களாக பெற்றெடுக்க வேண்டுமன வாழ்த்தி பேசினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பினி பெண்களுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருள்களுடன் ஐந்து வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா, மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியா பட்டாபிராமன், மமக மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பக்ருதீன், அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் ஜெகபர்தீன் மற்றும் ஏராளமான பெண்கள் அங்கன்வாடி பணியாளர்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மைதீன் தஞ்சை நிருபர்.