தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் வேலைநிறுத்தம்!!!!

தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் வேலைநிறுத்தம்!!!!

தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதிய தொகை (சென்னை பெருநகர மாநகராட்சியில், திறனற்ற உழைப்புக்கு (unskilled labour) நிர்ணயிக்கப்பட்ட ஊதிய தொகை) கொடுக்காததால் துப்புரவு பணியாளர்களில் ஒரு பகுதியினர் (வார்டு 34,43,44) மண்டலம் 3னில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஒப்பந்தத்தை எடுத்த ஒப்பந்ததாரர்கள் (ரூ 7500– 8000) வரை சம்பளம் தருவதாக கூறியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த தொகை ரூ 426 என்றால் அவர்களது சம்பளம் இ.எஸ்.ஐ. பி.எப். பிடித்தம் போக தோராயமாக ரூ 11,500 இருக்க வேண்டும்.
இதை ஒப்பந்ததாரர்கள் (contractors) தர மறுப்பதால் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மண்டலம் 3னில் வேலைக்கு செல்ல மருத்து வருகின்றனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

திரு. சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. முதன்மைச் செயலாளர் உள்ளாட்சி நிர்வாகம், திரு. பா. பொன்னையா இ.ஆ.ப. மாநகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் திரு. ராகுல்நாத் இ.ஆ.ப. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட திறனற்ற உழைப்பிற்கான ஊதியத்தை ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp