திருச்செந்தூர் கோவில் சார்பில் இலவச திருமணம்!! பிப்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!!!

திருச்செந்தூர் கோவில்
திருச்செந்தூர் கோவில்:

திருச்செந்தூர் முருகன் சுவாமி கோவில் சார்பில் நடக்கும் இலவச திருமணத்திற்கு வருகிற 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது செய்திக்குறிப்பில்:-

தமிழக இந்து அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இலவச திருமணத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதையடுத்து ஒரு திருமண ஜோடிக்கு ரூ.20 ஆயிரம் செலவிடப்படுகிறது. அதாவது திருமாங்கல்ய வகைக்கு 2 கிராம் தங்கம் ரூ. 10 ஆயிரம், மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை ரூ. 2 ஆயிரம், மணமக்கள் வீட்டார்களுக்கு 20 நபர்களுக்கு உணவு வகைக்கு ரூ. 2 ஆயிரம், திருமண மாலை மற்றும் புஷ்பம் ரூ. 1000, பாத்திரங்கள் வகைக்கு ரூ. 3 ஆயிரம், எதிர்பாராத செலவு ரூ. 1000 என மொத்தம் ரூ. 20 ஆயிரம் செலவிடப்பட உள்ளது.

இத்திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp