பூதபாண்டியில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு பூதலிங்க சிவகாமி அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா ஏற்பாடு தீவிரம்!!
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டியில் உலகபிரசித்தி பெற்ற அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் 22 ஆண்டுகள் கழிந்து வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தியதி 2023 ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பூதப்பாண்டி தெப்பக்குளம் பாதை மிகவும் மோசமாக இருந்ததை பூதப்பாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.நாராயணசாமி மற்றும் பூதப்பாண்டி பக்தர்கள் சங்கம் பேரூராட்சி அதிகாரியிடம் கோரிக்கைவைத்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கோரிக்கையின் அடிப்படையில் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் தெப்பக்குளம் பாதையில் போர்க்கால அடிப்படையில் சீரமைத்ததனர். பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி பக்தர்க சங்கம் பக்தர்களையும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நாராயணசாமியையும் மேலும் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கும், பேரூராட்சி தலைவர்.திரு.ஆலிவர்தாஸ் அவர்களுக்கும் பூதப்பாண்டி பேரூராட்சி துணை தலைவர்.தோழர்.அனில்குமார் அவர்களுக்கும்,
செயல் அலுவலர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் பொதுமக்கள் பாரட்டு தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ் குமார்.