மகள் காதலனுடன் சென்றதால் பெற்றோர் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்!!
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள கீழவல்லநாடு, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (45), இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிகாம் முடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அவரது மகள், தான் காதலித்து வந்த ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சென்றுவிட்டாராம். இதில் மனவேதனையடைந்த சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலையில் மனைவி தூக்கில் தாெங்கியதை பார்த்த அதிர்ச்சியில் கணவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம்.