மூணார் அருகே சாலையில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு???
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே தேவிகுளம் பிளாக் பஞ்சாயத்து அருகில் உள்ள இரைச்சல் பாறை அருகே சுற்றுலா பயணிகள் பயணம் செய்த கார் தீப்பிடித்து எரிந்தது.
கேரளா மாநிலம் கோட்டயத்தில் இருந்து மூணார் பகுதிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளின் கார் தேவிகுளம் சாலையை கடக்கும் பொழுது திடீரென புகை வர ஆரம்பித்தது உடனடியாக காரில் பிரயாணம் செய்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
என்ன காரணம் என்று பார்க்கும் முன்னால் வாகனம் வேகமாக தீப்பிடித்து எறிந்தது. இதனால் இருபக்கம் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தினர்.
அங்கே பரபரப்பு ஏற்பட்டது. மூணாறில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து வாகனத்தின் தீயை அணைத்தனர். ஆனாலும் முற்றிலுமாக எரிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர்த்தப்பினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.