மூணார் அருகே 5 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்டெடுக்கப்பட்ட இளைஞர்??

மூணார்

மூணார்

மூணார் அருகே 5 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்டெடுக்கப்பட்ட இளைஞர்??

மூணார் அருகே உள்ள மறையூர் என்ற பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள இளைஞன் உயிரிழப்பு.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர்: டிசம்பர் 31ஆம் தேதி 2022 அன்று திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் என்ற பகுதியை சேர்ந்த சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் வேலை செய்து வரும் விஷால் மற்றும் அவருடைய நண்பர்கள் கேரளா மாநிலம் மூணார் அருகே உள்ள மறையூர் என்ற பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

சின்னார் பகுதியில் உள்ள தூவனம் மலை அருவியில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கீழே இரண்டு பேர் விழ ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார். விஷால் என்ற இளைஞன் காணவில்லை அன்று முதல் மறையூர் தீயணைப்பு துறையினரும் காவல்துறை அதிகாரிகளும் சின்னார் பகுதி வனத்துறையினரும் சேர்ந்து தேட ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து இன்று அவர் வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

 

27 வயது ஆன இளைஞரான விஷால் இறந்ததற்கு காரணம் வனத்துறை சார்பில் அபாய எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைக்காததும் வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரை மீறி அத்துமீறி ஆபத்தான பகுதிகளுக்கு சென்று குளிப்பதாலும் இச்சம்பவங்கள் ஏற்படுகின்றன. வனத்துறையினர் பகுதிகளில் அபாயச் எச்சரிக்கை பதாகைகளை ஆங்காங்கே பொருத்த வேண்டும், வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும் அவர்களுக்கு சரியான தகவல்களை அளித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியும்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp