கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சேடல் டேம் பகுதிக்கு துணி துவைப்பதற்காக
தாயும் மகனும் சென்றுள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தாய் துணி துவைத்துக் கொண்டிருந்த பொழுது மகன் சஞ்சய் குமார் வயது 7 தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதைக் கண்ட தாய் செல்வி வயது 29 தன் மகனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். முயற்சி தோல்வி அடைந்ததின் விளைவாக இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். அந்த வகையில் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர்.
பலன் இல்லை. இருவரும் இறந்திருந்தனர். பின்பு இரு உடலையும் பிரோத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும் மகனும் உயிரிழந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-M.சுரேஷ்குமார்.