ஆன்லைன் ரம்மி என்னும் அரக்கனால் காவு வாங்கப்பட்ட பட்டதாரி இளைஞர்! தமிழகத்தில் தொடரும் சோகம்!!
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான மோகன் குமார். இவர் பி. எஸ். சி ஐ. டி படித்துவிட்டு சரியான வேலை இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலையில்லாத சூழலில் மோகன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்கி அடிமையாகியுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து செல்போனை பார்த்து விளையாடி வந்ததால் இளைஞர் மோகன் குமாருக்கு நீண்ட நாட்களாக தலைவலி மற்றும் பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஏற்கனவே பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோவையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.