தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் விழா . முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும், இணையத்தில் பதிவிட்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், திரு டிடிவி தினகரன் BE., அவர்கள் ஆணைக்கிணங்க, கழக தலைமை நிலைய செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றியக்குழு பெருந்தலைவர், திரு SVSP மாணிக்கராஜா அவர்களின் ஆலோசனைப்படி, ஒட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திரு உருவப்படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், திரு அ. சிவபெருமாள்MA. Ex. MLA ., அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் கழக MGR மன்ற துனை செயலாளர் பூலோக பாண்டியன் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அனந்தப்பன் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ் கபூர் மாவட்டMGR மன்ற செயலாளர் நல்லமலை செல்லத்துரை பாண்டியன் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட அம்மா பேரவை இனை செயலாளர் சுப்பையா மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அவைத்தலைவர் உலகையா மற்றும் கழக, மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, மாவட்ட பிற அணிச் செயலாளர்கள், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கேரளா மாணவர் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.