ஓடிக்கொண்டிருந்தபோதே காணாமல் போன சரக்கு ரயில்! அதிர்ச்சியில் திணறும் அதிகாரிகள்!
ரயில் தண்டவாளம் ரயில் என்ஜின்கள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு ரயிலே ‘அபேஸ் ஆகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் க்ரஹாரா என்ற ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் எஞ்சினை மர்ம நபர்கள் அக்கக்காக கழற்றி விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கழித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதே பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையம் அருகே, 2 கிலோ மீட்டருக்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்த ஒரு ரயிலே காணாமல் போயுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 90 கண்டெய்னர்களுடன் மும்பைக்குப் புறப்பட்டது.
இந்த ரயில் 4 அல்லது 5 நாட்களில் மும்பையை சென்று சேர்ந்திருக்கவேண்டிய நிலையில், தற்போது வரை 15 நாட்கள் ஆன நிலையிலும் இந்த ரயில் மும்பை சென்று சேரவில்லை.
இதன் காரணமாக இந்த ரயில் குறித்த விவரங்களை சேகரித்தபோது அந்த ரயில் காணாமல் போயுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. அந்த சரக்கு ரயில் கசரா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒம்பர்மலி ரயில் நிலையத்தைக் கடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன்பின் என்ன ஆனது என்பது குறித்த தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
சரக்கு போக்குவரத்து ரயில் பெட்டிகளின் இயக்கத்தை கண்காணிப்பதற்கான நிறுவப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட FOIS அமைப்பால்கூட இந்த ரயிலின் இருப்பிடத்தை கண்டறியமுடியவில்லை.
கடந்த சில நாட்களாக அந்த ரயிலை கண்டறிய அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அந்த ரயிலைப் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரயில், பாதி வழியில் காணாமல் போன நிலையில், அந்த ரயிலைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல்போன ரயிலில் ஏற்றுமதி செய்யவேண்டிய அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புடைய பிற பொருட்களால் நிரப்பப்பட்ட 90 கன்டெய்னர்கள் இருப்பதால் அந்த பொருள்களுக்குச் சொந்தக்காரர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், இதனால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
– பாரூக்.
One Response
ரயிலேரயிலே என்று தொடங்கும் பாடல் கலைவாணரால் பாடப்படும்.
அதேமெட்டில் காணாமல்போன ரயில் குறித்து பாடலாம்.
திருடர்ஆட்சியில் திருட்டா?
என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாம்.
*க|ர|டி*
*ர|யி|ல்*
*டி|ல்|லி*
என்று கட்டங்கட்டி களாய்க்கலாம்.