கனிமவள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்..

 

கனிமவள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக அவர் கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து பேசிய அவர் குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறி கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபடுவதாகவும் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் குடிநீர் ஆதாரங்கள் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனம் ஆவது மட்டுமின்றி நில அதிர்வுகளும் மாவட்டத்தில் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார் எனவே தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாக கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்தப் போவதாக அவர் கூறினார்.

-சீனி போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp