கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!!1

கழிவுகளை

கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!!

கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் கோழி இறைச்சிக் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் மற்றும் நகராட்சி திடக் கழிவுகளும், தமிழக எல்லைப் புற கிராமங்களில் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீஸாருடன் இணைந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொலை குற்றவாளிகளை தீவிர தேடுதல் வேட்டை நடத்திப் பிடித்த காவல்துறையினர்! தப்பிக்க முயன்றவர்களை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்!!

இது தொடர்பாக தமிழக மாசுக் கட்டுப் பாட்டு வாரியத் தலைவர், கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கேரளாவில் இருந்து எந்தவித கழிவுப் பொருட்களும், தமிழக எல்லைக்குள் கொண்டு வராமல் தடுக்க கேரள அரசின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

எல்லைகளில் சோதனை: இதையடுத்து, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து மாவட்ட போலீஸார், வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர். சட்ட விரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளால் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாழாகின்றன. நோய்களும் பரவுகின்றன.

கேரளா மற்றும் பிற மாநிலங்களில் சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர திடக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையோர கிராமங்களில் பயன் படாத விவசாய நிலங்களை குத்தகைக்கு வாங்கி, கழிவுகள் கொட்டப்படுவது தெரிய வந்துள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவ்வாறு நிலங்களை குத்தகைக்கு விடும் நில உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தகவல் அறிந்தால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971100, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0421-2970017,

வடக்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அலுவலகம் 0421-2236210, தெற்கு மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அலுவலகம் 04255-252225, பறக்கும் படை அலுவலர் 0421-2241131 என்ற எண்களில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின் மேலும் பல முக்கிய செய்திகளைப் பாருங்கள்:

https://nalaiyavaralaru.com/2023/02/கொலை-குற்றவாளிகளை-தீவிர/

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp