கோவையில் மகளிருக்கு இரவு நேரத்தில் மாரத்தான் போட்டி!!

கோவையில் மகளிருக்கு

கோவையில் மகளிருக்கு

கோவையில் மகளிருக்கு இரவு நேரத்தில் மாரத்தான் போட்டி!!

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் மகளிருக்கான இரவு நேர மாரத்தான் போட்டி வருகிற 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கான டீசர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக விழா இன்று ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல், டாக்டர்கள் பிரவீன்ராஜ், விஸ்வநாத், வேலாயுதம், ஸ்ரீதர் மற்றும் அத்லெட்டிக் சங்க நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஜெம் அறக்கட்டளை சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் முயற்சியாக இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கான மாரத்தான் போட்டி வருகிற 25ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் துவங்க உள்ளது. 3 கி.மீ, 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த மாரத்தான் நிகழ்ச்சியில், தடகள வீராங்கனைகள் பி.டி உஷா, அனிதா பால்ராஜ் மற்றும் பைக் ரேசர் அலிசா அப்துல்லா பங்கேற்க உள்ளனர். இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க 3500 க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

-சீனி போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp