கோவை கோனியம்மன் கோவில் திருவிழா, பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்திய காவல் அதிகாரிகள்!!

கோவை

கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற மார்ச் 1-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோனியம்மன் கோவில் தேர் செல்லும் ஊர்வலப் பாதைகளுக்கு சென்று , எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அருந்ததியர் இன மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் அவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி புகார் மனு!1

கோனியம்மன் தேரை பார்வையிட்டு அங்கு பணியிலிருந்த காவலர்கள் விழிப்புடன் காவல் பணி மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். மேலும் , கோனியம்மன் தேர் விழாவின் போது குற்றச் சம்பவங்கள் நடைபெறாவண்ணம் பாதுகாப்பு மேற்கொள்வது குறித்தும் , பொதுமக்களும் , பக்தர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வந்து செல்வதற்கும் , போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts